search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    விழுப்புரம் மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு

    விழுப்புரம் மாவட்டத்தில் நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43,720 ஆக உயர்ந்துள்ளது.

    இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 42,893 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 487 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×