search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    குடியரசு தலைவர் வருகை: பாதுகாப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

    இந்திய குடியரசு தலைவர் ஆகஸ்டு 2ம் தேதி தமிழகம் வரும் நிலையில் பாதுகாப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
     சென்னை:

    தமிழக சட்டசபை வளாகத்தில் கருணாநிதியின் உருவபடத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-ந்தேதி டெல்லி சென்று நேரில் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று ஜனாதிபதி விழாவுக்கு வருவதாக உறுதி அளித்தார்.

    தமிழக சட்டசபை வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் உருவபடத்தை திறக்க இரண்டாம் தேதி குடியரசு தலைவர் சென்னைக்கு வருகிறார்.

    குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி பாதுகாப்புகளைப் பலபடுத்தும் பணிகள் குறித்து  முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை  மேற்கொண்டார்.
    Next Story
    ×