search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியபோது எடுத்த படம்.
    X
    கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியபோது எடுத்த படம்.

    தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூரில் நாளை வார்டு வாரியாக ஆர்ப்பாட்டம்-பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.,பேச்சு

    அ.தி.மு.க.தலைமை அறிவித்தபடி தி.மு.க. அரசை கண்டித்து நாளை 28-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன், முன்னாள் எம்.பி., சி.சிவசாமி, அவைத்தலைவர் பழனிசாமி, என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

    கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-

    தலைமை அறிவித்தபடி தி.மு.க. அரசை கண்டித்து நாளை 28-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதை ஒவ்வொரு பகுதி வாரியாக, கிளைகள் வாரியாக அந்தந்த பகுதி நிர்வாகிகள் அங்கேயே சிறப்பாக நடத்த தி.மு.க. அரசின் மக்கள் விரோதப்போக்கினை பொதுமக்கள் அறியும் வண்ணம் கோஷமிட வேண்டும்.

    ஒவ்வொரு கிளை வாரியாக இந்த ஆர்ப் பாட்டத்தை நடத்திட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
    Next Story
    ×