search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர்
    X
    ஆசிரியர்

    2408 தற்காலிக ஆசிரியர்கள் பணி காலம் 3 ஆண்டு நீட்டிப்பு- தமிழக அரசு உத்தரவு

    888 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்பட்டிருந்தன. மொத்தம் 3296 பேர் பள்ளிகளில் தற்காலிக பணியில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 2011-2012 கல்வி ஆண்டில் 2064 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் 344 உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 2,408 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.

    888 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்பட்டிருந்தன. மொத்தம் 3296 பேர் பள்ளிகளில் தற்காலிக பணியில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு இவர்களுக்கு 3 ஆண்டு பணி நீடிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் தற்போது முடிவடைவதால் மேலும் 3 ஆண்டுகளுக்கு இவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    அதன்படி 2024-ம் ஆண்டு பிப்ரவரி வரை பணி நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×