என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் தாய்-மகன் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்27 July 2021 9:23 AM GMT (Updated: 27 July 2021 9:23 AM GMT)
மதுரையில் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் தாய் மற்றும் மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரை:
மதுரை அனுப்பானடி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி செல்வஈஸ்வரி (வயது 65). இவர்களுக்கு அருண்சக்கரவர்த்தி (வயது 28), சதீஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
நாகராஜ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார். மூத்த மகன் சதீசுக்கு திருமணமாகி, ராமநாதபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இளைய மகன் அருண் சக்கரவர்த்திக்கு திருமணமாகி, 6 மாதங்களில் விவாகரத்து ஆகி விட்டது. எனவே அவர் தாய் செல்வஈஸ்வரியுடன் வசித்து வருகிறார்.
அருண் சக்கரவர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்தது. அவர் தினமும் குடித்துவிட்டு வந்து தாயாரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
இந்த நிலையில் செல்வ ஈஸ்வரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதனால் அவர் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
அருண் சக்கரவர்த்தி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால் மூத்த மகன் சதீஷ் கொடுக்கும் ரூ.10 ஆயிரத்தை வைத்து வீட்டு வாடகை உள்பட அனைத்து செலவுகளையும் கவனித்து வந்தார். இதனால் அவர்கள் குடும்பத்தில் வறுமை நிலவியது.
இந்த நிலையில் அருண் சக்கரவர்த்தி சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வழக்கம் போல தாயுடன் சண்டை போட ஆரம்பித்தார். இதனால் செல்வ ஈஸ்வரி ஆத்திரத்தில், “வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டிய வயதில் இப்படி குடித்து விட்டுத் திரிகிறாய். நான் இருக்கும் வரை உன்னை பார்த்துக் கொள்வேன். நான் போன பிறகு உன்னை யார் கவனித்துக் கொள்வார்கள்?” என்று வருத்தப்பட்டு கூறி உள்ளார்.
அப்போது அருண் சக்கரவர்த்தி, “என்னை நீங்கள் இப்படி தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தால், நான் தீக்குளித்து இறந்து விடுவேன்” என்று மிரட்டியபடி சமையலறைக்குச் சென்று மண்ணெண்ணெய் கேனை எடுத்துவந்து உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டார்.
அப்போது மகனைப் பார்த்து பதறிய செல்வ ஈஸ்வரி தானும் மண் எண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டார். கண்இமைக்கும் நேரத்தில் தாய்-மகன் 2 பேரும் உடலில் தீ வைத்து கொண்டனர். உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் அலறிய அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் செல்வ ஈஸ்வரி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அருண் சக்கரவர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரையில் தாய், மகன் ஆகிய 2 பேரும் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அனுப்பானடி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி செல்வஈஸ்வரி (வயது 65). இவர்களுக்கு அருண்சக்கரவர்த்தி (வயது 28), சதீஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
நாகராஜ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார். மூத்த மகன் சதீசுக்கு திருமணமாகி, ராமநாதபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இளைய மகன் அருண் சக்கரவர்த்திக்கு திருமணமாகி, 6 மாதங்களில் விவாகரத்து ஆகி விட்டது. எனவே அவர் தாய் செல்வஈஸ்வரியுடன் வசித்து வருகிறார்.
அருண் சக்கரவர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்தது. அவர் தினமும் குடித்துவிட்டு வந்து தாயாரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
இந்த நிலையில் செல்வ ஈஸ்வரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதனால் அவர் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
அருண் சக்கரவர்த்தி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால் மூத்த மகன் சதீஷ் கொடுக்கும் ரூ.10 ஆயிரத்தை வைத்து வீட்டு வாடகை உள்பட அனைத்து செலவுகளையும் கவனித்து வந்தார். இதனால் அவர்கள் குடும்பத்தில் வறுமை நிலவியது.
இந்த நிலையில் அருண் சக்கரவர்த்தி சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வழக்கம் போல தாயுடன் சண்டை போட ஆரம்பித்தார். இதனால் செல்வ ஈஸ்வரி ஆத்திரத்தில், “வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டிய வயதில் இப்படி குடித்து விட்டுத் திரிகிறாய். நான் இருக்கும் வரை உன்னை பார்த்துக் கொள்வேன். நான் போன பிறகு உன்னை யார் கவனித்துக் கொள்வார்கள்?” என்று வருத்தப்பட்டு கூறி உள்ளார்.
அப்போது அருண் சக்கரவர்த்தி, “என்னை நீங்கள் இப்படி தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தால், நான் தீக்குளித்து இறந்து விடுவேன்” என்று மிரட்டியபடி சமையலறைக்குச் சென்று மண்ணெண்ணெய் கேனை எடுத்துவந்து உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டார்.
அப்போது மகனைப் பார்த்து பதறிய செல்வ ஈஸ்வரி தானும் மண் எண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டார். கண்இமைக்கும் நேரத்தில் தாய்-மகன் 2 பேரும் உடலில் தீ வைத்து கொண்டனர். உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் அலறிய அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் செல்வ ஈஸ்வரி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அருண் சக்கரவர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரையில் தாய், மகன் ஆகிய 2 பேரும் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X