என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொற்கை அகழாய்வில் திரவ பொருள் வடிகட்டும் 9 அடுக்கு குழாய் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்27 July 2021 3:00 AM GMT (Updated: 27 July 2021 3:00 AM GMT)
கொற்கையில் பழங்காலத்தில் சங்கு அறுக்கும் தொழிற்சாலை இருந்ததும், 10 அடுக்கு செங்கல் கட்டுமானம் இருந்ததும் கண்டறியப்பட்டது.
தூத்துக்குடி:
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர், ஏரல் அருகே சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கொற்கையில் 17 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு நடந்து வருகிறது. இங்கு பழங்காலத்தில் சங்கு அறுக்கும் தொழிற்சாலை இருந்ததும், 10 அடுக்கு செங்கல் கட்டுமானம் இருந்ததும் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் கொற்கை அகழாய்வில், ஒரு குழியில் திரவ பொருட்கள் வடிகட்டும் குழாய் பல அடுக்குகளாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 9 அடுக்குகளாக கண்டறியப்பட்ட இந்த குழாய் முழுவதையும் அகழ்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மற்றொரு குழியில் முழுமையான மண்பானையும், அதன் அருகில் 3 சங்குகளும், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர், ஏரல் அருகே சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கொற்கையில் 17 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு நடந்து வருகிறது. இங்கு பழங்காலத்தில் சங்கு அறுக்கும் தொழிற்சாலை இருந்ததும், 10 அடுக்கு செங்கல் கட்டுமானம் இருந்ததும் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் கொற்கை அகழாய்வில், ஒரு குழியில் திரவ பொருட்கள் வடிகட்டும் குழாய் பல அடுக்குகளாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 9 அடுக்குகளாக கண்டறியப்பட்ட இந்த குழாய் முழுவதையும் அகழ்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மற்றொரு குழியில் முழுமையான மண்பானையும், அதன் அருகில் 3 சங்குகளும், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X