search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருச்சி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை

    திருச்சி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி வரகனேரி பெரியபாளையத்தை சேர்ந்தவர் பாசித்ராஜ் (வயது 27). மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், மனஉளைச்சலில் கடந்த 14-ந் தேதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×