search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தஞ்சையில் காதலுக்கு இடையூறாக இருந்தவர் வெட்டிக்கொலை

    தஞ்சை அருகே காதலுக்கு இடையூறாக இருந்தவரை மது வாங்கி கொடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 2 வாலிபர்கள் போலீசில் சரணடைந்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே பர்மா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சந்தோஷ் (23), இவர் பிள்ளையார்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் பூரண பிரியா (21) என்பவரை நீண்டநாட்களாக காதலித்து வந்துள்ளார்.

    பூர்ண பிரியாவை சந்தோஷ் அடிக்கடி பிள்ளையார்பட்டியில் சந்தித்து பேசியுள்ளார் இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததை அதே ஊரை சேர்ந்த செல்வநாதன் (38) என்பவர் பார்த்து கண்டித்துள்ளார். பிறகு அவர்களிடம் உங்கள் காதலை வீட்டில் சொல்லி விடுவதாகவும் மிரட்டி தினமும் சந்தோஷிடம் மது குடிப்பதற்காக பணம் வாங்கியதாக என கூறப்படுகிறது. சிலநேரங்களில் சந்தோஷ், செல்வநாதனுக்கு பணம் கொடுக்க முடியாமல் இருந்துள்ளார். மீண்டும் உங்கள் காதலை பெண்ணின் வீட்டாரிடம் சொல்லி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த அவர் இனியும் செல்வநாதனை உயிரோடு விட்டால் காதலுக்கு இடையூறாக இருக்கும் என எண்ணி நேற்று இரவு செல்வநாதனை மது குடிப்பதற்காக பைபாஸ் சாலையில் உள்ள கிரீன் சிட்டி பின்புறம் ஒரு திடலுக்கு வரவழைத்துள்ளார்.

    அங்கு சந்தோஷ் அவரது நண்பர் பர்மா காலனியைச் சேர்ந்த ரமேஷ் மகன் அமரேஸ் இருவரும் செல்வநாதனுடன் மது அருந்தியுள்ளனர் போதை தலைக்கேறியதும் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வநாதனை சரமாரியாக வெட்டினர் இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். சந்தோஷ் மட்டும் போலீசாரிடம் கொலை செய்தது நான் தான் என்று ஒப்புக் கொண்டு சரண் அடைந்தார். அமரேஸ் தப்பி ஓடிவிட்டார். பின் போலீசாருக்கு பயந்து நேற்று இரவு அவரும் போலீசில் சரணடைந்தார். இதுகுறித்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×