search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஓய்வு பெறும் வயதை உயர்த்த சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

    உரிய விதிமுறைகளின்படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருப்பூர்:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 5-வது மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் பாக்கியம் சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட இணை செயலாளர் ஜெயந்தி வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் ஜெயமேரி, மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

    மாநாட்டில் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தபடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பிறகு மாதம் ரூ.9ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு பணியாளரின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும்.

    விருப்ப பணியிட மாறுதல் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உரிய விதிமுறைகளின்படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×