என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
Byமாலை மலர்25 July 2021 2:28 PM GMT (Updated: 25 July 2021 2:28 PM GMT)
போத்தனூர் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போத்தனூர்:
கோவை வெள்ளலூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் நேதாஜி (வயது 19). இவருக்கும் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேதாஜி, ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் வெள்ளலூர் கிராம நிர்வாக அலுவலருக்கும், குழந்தைகள் உதவி மையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் நேதாஜி, சிறுமியை திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேதாஜியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X