என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் - விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த முடிவு
Byமாலை மலர்24 July 2021 12:06 PM GMT (Updated: 24 July 2021 12:06 PM GMT)
ஆழியார் அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு ரூ.650 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு தயாராகி வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தெரிவித்திருந்தார்.
திருப்பூர்:
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையிலான விவசாயிகள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
அப்போது அங்கு வந்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கலெக்டர் வினீத்திடம் அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆழியார் அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு ரூ.650 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு தயாராகி வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தெரிவித்திருந்தார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் பி.ஏ.பி. மூலம் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இதேபோல் மறைமுகமாக75 சதவீத அளவுக்கு விவசாய பூமிகளுக்கும் கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் தான் ஊர் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. மேற்கண்ட அமைச்சரின் அறிவிப்பு பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்போதுள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஒரு சுற்று தண்ணீர் கிடைக்கிறது.
இந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால் திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விவசாயம் அழிந்துவிடும்.
திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் பாசனத்துக்காக ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை செயல்படுத்த பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்த திட்டத்துக்கு கேரள அரசாங்கம் போதிய ஒத்துழைப்பு வழங்காமலும், பேச்சுவார்த்தைக்கு வராமல் இழுத்தடித்து வருகிறது.
பி.ஏ.பி.பாசனத் திட்டம் தொடங்கப்பட்டு, தண்ணீருக்காக காத்திருக்கும் நிலையில், ஆழியாறு அணையில்இருந்து 120 கி.மீ. தூரம் உள்ள ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல முயற்சிப்பதை விவசாயிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த நினைப்பதை கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
பி.ஏ.பி. விவசாயிகளை பாதிக்கும்வகையில் ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் திட்டம் செயல்படுத்துவதைக்கண்டித்து கோவை, திருப்பூர்மாவட்ட விவசாயிகள் இணைந்து பொள்ளாச்சி பி.ஏ.பி. அலுவலகத்தில் வரும் வாரத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X