search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    திருச்சி அ.மு.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

    புதிதாக அ.தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
    சேலம்:

    அ.ம.மு.க. மாநில இளைஞர் அணி தலைவர் ஜோதிவாணன், திருச்சி மாவட்ட அ.ம.மு.க. இளைஞர் அணி செயலாளர் பாலாஜி, மாவட்ட பேரவை தலைவர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் சரவணன், மாவட்ட மாணவரணி தலைவர் பாபு, மாவட்ட அமைப்பு செயலாளர் சொக்கலிங்கம், மாநகர வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கவுசல்யா, நெசவாளர் அணி செயலாளர் சீனிவாசன் ஆகியோர் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்து தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

    அதேபோல் திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை பகுதி செயலாளர் வேலு, பாலகரை பகுதி செயலாளர் கண்ணன், ஏர்போர்ட் பகுதி செயலாளர் நாகராஜ், 19-வது வட்ட கழக செயலாளர்கள் கணேசன், 35-வது வட்ட கழக செயலாளர் சரவணன் ஆகியோரும் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    புதிதாக அ.தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது அ.தி.மு.க. திருச்சி மாநகர செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், எம்.ஜி.ஆர். அணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன், உறையூர் பகுதி செயலாளர் பூபேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×