என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவியை வெட்டிய தொழிலாளி 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது
Byமாலை மலர்24 July 2021 10:48 AM GMT (Updated: 24 July 2021 10:48 AM GMT)
மனைவியை வெட்டிய தொழிலாளி 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டர் இதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் என்ற ராஜ் (வயது 38). கூலி தொழிலாளியான இவர் தனது மனைவி ஊரான கங்கைகொண்டான் அருகே வெங்கடாசலபுரத்தில் வசித்து வந்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வீரபுத்திரனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வீரபுத்திரன், கங்கைகொண்டான் அருகே பருத்திகுளம் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் விரைந்து சென்று, வீரபுத்திரனை கைது செய்தனர். மனைவியை வெட்டிய தொழிலாளி 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X