search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஒரத்தநாடு அருகே மதுபாட்டில் விற்ற முதியவர் கைது

    ஒரத்தநாடு அருகே மதுபாட்டில் விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமண கோட்டை கீழையூரில் திருட்டுத்தனமாக பெட்டிக் கடையில் மதுபாட்டில் விற்பதாக ஒரத்தநாடு காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

    தகவலின்படி பாப்பாநாடு சப்-இன்ஸ்பெக்டர் மோகனுக்கு டி.எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர் அங்கு ஒரு பெட்டி கடையில் மது விற்பது தெரியவந்தது.

    அந்த கடையில் மது விற்றுக்கொண்டிருந்த ராமச்சந்திரன் (61), என்பவரை பிடித்து அவரிடமிருந்து 161 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×