என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தந்தை இறந்த வேதனையில் விஷம் தின்று வாலிபர் தற்கொலை - அதிர்ச்சியில் தாயும் பலி
Byமாலை மலர்23 July 2021 8:42 PM GMT (Updated: 23 July 2021 8:42 PM GMT)
தந்தை இறந்த வேதனையில் விஷம் தின்று வாலிபர் தற்கொலை அதிர்ச்சியில் தாயும் பலியான சம்பவம் குற்த்து போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர்
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் மேலநத்தம் தோப்புக்காடு தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(வயது 55). இவரது மனைவி அருள்நிறைசெல்வி(45). இவர்களது மகன் சதீஷ்(22). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கல்யாணசுந்தரம் இறந்து விட்டார். தனது தந்தை இறந்த சோகத்தில் சதீஷ் துக்கம் தாங்காமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் நேற்று முன்தினம் சதீஷ் எலிமருந்தை(விஷம்) சாப்பிட்டுள்ளார். இதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். மகன் இறந்த செய்தியை கேட்ட தாய் அருள்நிறைசெல்வி அதிர்ச்சியில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகன் ஆகியோர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X