என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் அருகே மணல் அள்ளியவர் கைது
Byமாலை மலர்23 July 2021 2:20 PM GMT (Updated: 23 July 2021 2:20 PM GMT)
ராமநாதபுரம் அருகே மணல் அள்ளியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை குரூப் கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெற்கு வாணிவீதி குப்பை ஊருணி அருகில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். வருவாய்த்துறையினர் அங்கு சென்றதும் டிராக்டருடன் மணலை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதனை கைப்பற்றி கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலாந்தரவை அண்ணாநகரை சேர்ந்த குட்டி பூசைத்துரை, இளசு இளையராஜா ஆகியோரை தேடி வருகின்றனர்.
இதேபோல, ஏந்தல் சுடுகாடு அருகில் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். இதனை கண்டு விரைந்து சென்று மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து வாலாந்தரவையை சேர்ந்த மகேந்திரபிரபு(வயது 29) என்பவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மகேந்திரபிரபுவை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X