என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இ.எஸ்.ஐ., திட்டத்தில் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள்
Byமாலை மலர்23 July 2021 8:47 AM GMT (Updated: 23 July 2021 8:47 AM GMT)
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி முழுமையாக முடங்கியதால் இந்த துறை சார்ந்து மட்டும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்தனர்.
திருப்பூர்:
கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நிறுவனங்கள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். கடன் திருப்பி செலுத்த அவகாசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்த மத்திய அரசு இ.எஸ்.ஐ.,ல் சிகிச்சை பெறுவதற்கான விதிமுறையையும் தளர்த்தியது.
6 மாதங்களில் 78 நாட்கள் தொழிலாளர்கள் பணிபுரியாத போதும் நடப்பு 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான மாதங்களில் இ.எஸ்.ஐ.,ல் உயர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி ஏராளமானோர் சிகிச்சை பெற்றனர்.
நடப்பாண்டில், மே, ஜூன் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்தது. திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி முழுமையாக முடங்கியதால் இந்த துறை சார்ந்து மட்டும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்தனர். ஆனாலும் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஊரடங்கு இல்லாததால் நடப்பு ஆண்டு இ.எஸ்.ஐ.,ல் சிகிச்சை பெறுவதற்கான விதிகளை அரசு தளர்த்தவில்லை.
கொரோனா முதல் அலை ஏற்படுத்திய உடல் நல பாதிப்பு, முதல் அலைக்குப்பின் வேலை இழப்பு, புதிதாக உருவான உடல் நல கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 6 மாதங்களில் பல தொழிலாளர்களால் 78 நாட்கள் பணிபுரிய முடியவில்லை.
இதனால் இத்தகைய தொழிலாளர்கள் உயர் சிகிச்சை பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா இரண்டாவது அலைக்குப்பின் தமிழகத்தில் தற்போதுதான் நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை தொடங்கியுள்ளன. 2 மாதமாக வேலை இல்லாததால் வருவாய் இன்றி பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெருக்கடியான இச்சூழலில் இ.எஸ்.ஐ.யில் சிகிச்சை பெற முடியாதது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே குறைந்தபட்ச பணி நாட்களில் தளர்வு அளித்து சிகிச்சை பெற அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X