search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
    X
    முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்கவேண்டும் - நடிகை மனுதாக்கல்

    முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை அடிப்படையில் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
    ஆலந்தூர்:

    நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வன்கொடுமை உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

    இந்நிலையில் சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் நடிகை தரப்பில் நஷ்டஈடு கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும்போது பிரச்சினை ஏற்பட்டால் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி மோசடி செய்ததால் உடல் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன். மன உளைச்சல் காரணமாக மணிகண்டன் எனக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் வீட்டு வாடகை, மருத்துவ செலவு உள்பட இடைக்கால நிவாரண தொகையாக மாதந்தோறும் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

    இந்த மனு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×