என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் பக்ரீத் சிறப்பு தொழுகை
Byமாலை மலர்21 July 2021 11:35 AM GMT (Updated: 21 July 2021 11:35 AM GMT)
இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்தினோம். இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் குறைந்து வழிபாட்டுதலங்கள் திறக்க அனுமதிக்கபட்டதால் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களுக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினர்.
திருப்பூர் நொய்யல் வீதி, மாநகராட்சி அருகே உள்ள பள்ளிவாசல், ஜெய்வாபாய் பள்ளி அருகே உள்ள மைதானம், காங்கயம் ரோடு மற்றும் பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். பின்னர் உறவினர்கள், அருகில் வசிப்பவர்கள், ஏழை, எளியவர்களுக்கு குர்பானி வழங்கினர். இது குறித்து இஸ்லாமியர்கள் கூறுகையில்,கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு ரம்ஜான், பக்ரீத் தொழுகையை வீட்டிலேயே நடத்தினோம்.
இந்தாண்டு தொற்று குறைந்துள்ளதால் பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்தினோம். இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏழைகளுக்கு எண்ணற்ற உதவிகளை செய்தோம் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X