என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் வாலிபர்களிடம் கவர்ச்சியாக பேசி உல்லாசத்திற்கு அழைத்த பெண் கைது
Byமாலை மலர்21 July 2021 11:25 AM GMT (Updated: 21 July 2021 11:25 AM GMT)
கலைச்செல்வி வாலிபர்களின் செல்போனுக்கு போன் செய்து உல்லாசத்திற்கு அழைத்து பணம் பறித்துள்ளது தெரியவந்தது.
திருப்பூர்:
மதுரையை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 33). திருப்பூர் ராதாநகர் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் ஒருவர், கணேஷ்குமாரிடம் கவர்ச்சியாக பேசியதுடன் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணேஷ்குமார் இது குறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த கலைச்செல்வி (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்தனர்.
அப்போது பல்வேறு வாலிபர்களின் செல்போனுக்கு போன் செய்து உல்லாசத்திற்கு அழைத்து பணம் பறித்துள்ளது தெரியவந்தது. மேலும் வீட்டில் ஒரு பெண்ணை அடைத்து வைத்து விபசாரம் நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த பெண்ணை போலீசார் மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X