என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னைக்கு மேலும் 5.5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை வருகிறது
Byமாலை மலர்21 July 2021 5:13 AM GMT (Updated: 21 July 2021 8:30 AM GMT)
தமிழகத்திற்கு அதிக அளவு தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொது மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
தமிழகத்திற்கு அதிக அளவு தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து தற்போது தடுப்பூசி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. நேற்று 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தன. அதனை தொடர்ந்து 5 லட்சத்து 42 ஆயிரத்து 280 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை சென்னை வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
நேற்று வரை 1 கோடியே 83 லட்சத்து 56 ஆயிரத்து 631 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக 1 லட்சம், 2 லட்சம், 3 லட்சம் என்ற அளவில்தான் தடுப்பூசி போடப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மையங்களுக்கு ஆர்வத்துடன் மக்கள் வந்த போதிலும், அவர்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாநில மருத்துவ கிடங்கிற்கு வரும் தடுப்பூசியின் அளவை பொறுத்து மாவட்டங்களுக்கு பிரித்து ஒதுக்கப்படுகிறது. இதனால் தேவையான அளவு தடுப்பூசி செலுத்த முடியாத நிலை உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொது மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
ஆனால் தேவையான அளவுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு இல்லாததால் குறைந்த அளவில் மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து தற்போது தடுப்பூசி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. நேற்று 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தன. அதனை தொடர்ந்து 5 லட்சத்து 42 ஆயிரத்து 280 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை சென்னை வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
நேற்று வரை 1 கோடியே 83 லட்சத்து 56 ஆயிரத்து 631 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக 1 லட்சம், 2 லட்சம், 3 லட்சம் என்ற அளவில்தான் தடுப்பூசி போடப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மையங்களுக்கு ஆர்வத்துடன் மக்கள் வந்த போதிலும், அவர்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாநில மருத்துவ கிடங்கிற்கு வரும் தடுப்பூசியின் அளவை பொறுத்து மாவட்டங்களுக்கு பிரித்து ஒதுக்கப்படுகிறது. இதனால் தேவையான அளவு தடுப்பூசி செலுத்த முடியாத நிலை உள்ளது.
கொரோனா 3-வது அலை தாக்கக் கூடும் என்ற எச்சரிக்கை மருத்துவ வல்லுனர்களால் விடுக்கப்பட்டு வருவதால், அதற்குள்ளாக தடுப்பூசியை செலுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்... கொரோனா தடுப்பூசி போட்டால்தான் 100 நாள் வேலைக்கு அனுமதி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X