search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாளை பகுதியில் புதிதாக கட்டும் வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

    பாளை பகுதியில் புதிதாக கட்டும் வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை, தியாகராஜநகர் புறநகர் பகுதியில் புதிதாக ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அப்படி கட்டப்படும் வீடுகளில் இரும்பு கம்பிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அடிக்கடி திருட்டு போவதாக தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்பட்டு வந்தது.

    பெருமாள்புரத்தைச் சேர்ந்த கல்யாணகுமார் என்பவர் டி.வி.எஸ். நகரில் புதிதாக கட்டும் வீட்டில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகள் திருட்டு போனதாக புகார் புகார் செய்திருந்தார்.

    இதுபோல தியாகராஜநகர் விரிவாக்கப் பகுதியில் புதிதாக வீடு கட்டி வரும் பிச்சுமணி என்பவரது வீட்டில் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள டைல்ஸ் பெட்டிகள் திருட்டு போனது. இது குறித்து அவர் புகார் செய்தார்.

    இது தொடர்பாக பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் ஆய்வு செய்த போது 2 வாலிபர்கள் உருவம் அடிக்கடி பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து போலீசார் முறப்பநாடு பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 25), வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்த முருகன் (32) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் தான் புதிதாக கட்டும் வீடுகளில் இருந்து இரும்பு கம்பி மற்றும் பொருட்களை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இரும்பு கம்பிகள், டைல்ஸ்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×