search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பூதலூரில் மதுபானம் விற்றவர் கைது

    பூதலூரில் மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    பூதலூர் காமராஜர் நகர் பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் மற்றும் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு காமராஜர் நகரில் அன்பு (வயது45) என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×