என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாராபுரம் வாலிபர் கொலை கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
Byமாலை மலர்19 July 2021 10:55 AM GMT (Updated: 19 July 2021 10:55 AM GMT)
கோபிநாத்தின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை கைது செய்யக்கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள விராச்சிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 21). சுமைதூக்கும் தொழிலாளி. இவர் மடத்துப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து ஆஸ்பத்திரி முன்பு கோபிநாத்தின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை கைது செய்யக்கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கோபிநாத் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கோபிநாத்தை கொன்ற கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X