search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    பூதலூர், திருவையாறு பகுதியில் 776 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

    பூதலூர் ஒன்றியத்தில் செல்லப்பன் பேட்டை கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
    திருக்காட்டுப்பள்ளி:

    பூதலூர் ஒன்றியத்தில் செல்லப்பன் பேட்டை கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பூதலூர் வட்டாரத்தில் நேற்று 3 ஊர்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முத்துவீரக்கண்டியன்பட்டியில் 166 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 156 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். கோட்டரப்பட்டி கிராமத்தில் நடந்த முகாமில் 125 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 145 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். வில்வராயன்பட்டி கிராமத்தில் 106 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். திருவையாறு தாலுகாவில் நடுக்காவேரி, கடுவெளி, எட்டரைவேலி, திருவாலம்பொழில், வடுகக்குடி, உப்புக்காச்சிப்பேட்டை ஆகிய 6 இடங்களில் 379 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. விளாங்குடி, திருவையாறு, மகாராஜபுரம் ஆகிய 3 இடங்களில் 211 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.
    Next Story
    ×