search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பெண் மருத்துவரிடம் செல்போன் திருடியவர் கைது

    தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் இருந்து செல்போனை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய் வார்டில் அன்சிகா என்ற பெண் மருத்துவர் பணியில் இருந்துள்ளார்.

    அவர் வைத்திருக்கும் செல்போனை மேஜையில் வைத்துவிட்டு நோயாளியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த பக்கிரிசாமி (57) என்பவர் அந்த செல்போனை திருடி சென்றுவிட்டார்.

    இதுகுறித்து அன்சிகா கொடுத்த புகாரின் பேரில் மருத்துவமனை போலீசார் செல்போன் திருடனை தேடி வந்துள்ளனர். பிடித்து விசாரித்தபோது செல்போனை எடுத்ததை ஒப்புக்கொண்டார். பின் செல்போன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×