search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, கல்வராயன் மலை ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களிலும், சின்னசேலம், மணலூர் பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர், தியாக துருகம், உளுந்தூர்பேட்டை, வடக்கனந்தல் ஆகிய பேரூராட்சி அலுவலகங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்திலும், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நாளை (19 ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதுவரை தடுப்பூசி செலுத்தாத மாற்றுத்திறனாளிகள் இந்த முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் இந்த முகாம்களில் பங்கேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்று ஏற்பாடாக கள்ளக்குறிச்சி கோவிட் கட்டுப்பாட்டு தொலைபேசி எண் 04151- 220000 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு வந்து அல்லது வீட்டிற்கு அருகாமையில் வருகைபுரிந்து கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    எனவே இந்த அறிய வாய்ப்பினை பயண்படுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×