search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    விபத்தில் முதியவர் பலி

    சாப்பிடுவதற்காக கம்பெனியில் இருந்து எதிரே உள்ள ஓட்டலுக்கு செல்லும் போது மோதியது
    பல்லடம்:

    மயிலாடுதுறை தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கமாலுதீன் (வயது 64). இவர் கோவையிலுள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து  வந்தார். 

    இந்த நிலையில் பல்லடம் அருகே லட்சுமி மில் பகுதியில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்ப்பதற்கு நேற்று முன்தினம் அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த அவர் சம்பவத்தன்று இரவு சாப்பிடுவதற்காக கம்பெனியில் இருந்து எதிரே உள்ள ஓட்டலுக்கு செல்வதற்காக கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கீழே விழுந்த கமாலுதீன் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மகன் முகமது தாஜிதீன் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×