search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா

    நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    நாமக்கல்:

    தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 46,277 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்ட பட்டியலில் இருந்து 4 பேரின் பெயர்கள் நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,281 ஆக உயர்ந்தது.

    இந்த நிலையில் நேற்று மேலும் 69 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,350 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 69 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினார்.

    இதனிடையே நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 434 பேர் பலியாகி இருந்தனர்‌. இந்த நிலையில் நேற்று ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 435 ஆக உயர்ந்தது. இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 45,085 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 830 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×