என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராமநாதபுரம் அருகே கார்-பைக் மோதல்: பெண் உள்பட 2 பேர் பலி
ராமநாதபுரம்:
ராமேசுவரம் அருகே உள்ள மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து ரமேஷ். இவரது மனைவி கஜேந்தினி (வயது40).
இவர் வாலாந்தரவை அருகே கீரிப்புள்ளை கிராமத்தில் உள்ள உறவினர் பத்மா வீட்டிற்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக தனது உறவினர் கருப்பசாமி (48) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
அங்கு உறவினர் பத்மாவை சந்தித்து விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டார். அப்போது பத்மாவின் மகன் ஆதிகேசவன் (13) அவர்களுடன் ராமேசுவரம் வருவதாக கூறினான். இதனால் அவனையும் அழைத்துக் கொண்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
உச்சிப்புளியை அடுத்துள்ள பிரப்பன் வலசை பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கஜேந்தினி உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கஜேந்தினி, ஆதிகேசவன் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கஜேந்தினி இறந்தார்.
விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் மதுரையைச் சேர்ந்தது என தெரியவந்தது.
மதுரையைச் சேர்ந்த வாசுதேவன் (55) என்பவர் குடும்பத்தினருடன் ராமேசுவரம் கோவிலில் தரிசனத்தை முடித்து விட்டு திரும்பிய போது தான் இந்த விபத்து ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்