என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்
Byமாலை மலர்17 July 2021 12:08 AM GMT (Updated: 17 July 2021 12:08 AM GMT)
திறமையான விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்படும் என ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள வீரர்களிடம் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
சென்னை:
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியில் நீங்கள் கலந்துகொள்ள இருக்கிறீர்கள் என்பதை நினைக்கும்போதே உங்களுக்கு எத்தகைய பெருமை இருக்கிறதோ, அதேபோன்று எனக்கும் பெருமையாக இருக்கிறது.
நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று பதக்கங்களோடு தான் தமிழ்நாட்டுக்கு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. மக்களுடைய நம்பிக்கையும் அது தான்.
உங்களில் பலருக்கும் வறுமை சூழ்ந்த வாழ்க்கையாக இருந்தாலும், விளையாட்டுப் போட்டிகளின் மீது உங்களுக்கு இருந்த ஆர்வமும், உங்கள் திறமை மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையும் தான் உங்களை இந்த உயரத்துக்கு அழைத்து வந்துள்ளது.
இனிமேல் உங்களுக்கு பொருளாதார தடைகள் இல்லாதவாறு அரசு பார்த்துக்கொள்ளும். விளையாட்டில் திறமையுள்ளவர்களின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.
விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறத் தேவையான பொருட்கள், தரமான உணவு, உறைவிடம், உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படுவது உறுதிசெய்யப்படும். விளையாட்டு போட்டிகளில் பெண்கள் அதிக ஆர்வத்தோடு பங்கெடுக்கிறார்கள். அவர்களுக்கான முழு உதவியையும் இந்த அரசு செய்யும்.
ஆண் வீரர்களுக்கு பொருளாதார தடை மட்டும்தான் இருக்கும். பெண் வீரர்களுக்கு அத்தோடு சேர்ந்து குடும்ப தடைகள், சமுதாய தடைகள் அதிகமாக இருக்கும். இந்த தடைகளை எல்லாம் தாண்டித்தான் ஒலிம்பிக் போட்டிகளில் பயிற்சிபெற நீங்கள் வந்துள்ளீர்கள். உங்களது திறமையைத் தமிழ்நாடு அரசு மெச்சுகிறது.
அடுத்தடுத்து நடைபெற இருக்கும் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்னும் ஏராளமானவர்கள் கலந்துகொள்ளும் சூழலை அரசு ஏற்படுத்தித் தரும் என்று உறுதியளிக்கிறேன். இந்த அரசு விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X