search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    சாத்தான்குளம் அருகே 2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம்

    சாத்தான்குளம் அருகே 2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா பாண்டி (வயது 33). கூலி தொழிலாளி. இவரது மனைவி துரைசெல்வி (24). இவர்களுக்கு மகன் முத்துமாரி (4), மகள் சங்கீதா (3) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை துரைசெல்வி தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவர்கள் எங்கு சென்றனர் என்பது தெரிய வில்லை. கணவர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை பற்றிய தகவல் இல்லை.

    இதுதொடர்பாக சுப்பையா பாண்டி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய் மற்றும் 2 குழந்தைகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×