என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ் நிலையங்களில் வீணாகும் வாகனங்கள்-ஏலம் விட வலியுறுத்தல்
Byமாலை மலர்16 July 2021 10:58 AM GMT (Updated: 16 July 2021 10:58 AM GMT)
போலீஸ் நிலைய வளாகத்திலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வீணாகி வருகின்றன.
பல்லடம்:
பல்லடத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பழைய போலீஸ் நிலையம் முன்பும், பனப்பாளையம், மகளிர் போலீஸ் நிலையம் வளாகத்திலும் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவை துருப்பிடித்து வீணாகி வருகின்றன.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் பல்லடம் பழைய போலீஸ் நிலையம் அருகே கிடக்கும் வாகனங்கள் பல ஆண்டுகளாக நினைவு சின்னங்களாக இங்கு உள்ளன. அவை காயலான் கடைக்கு கூட வழங்க முடியாத அளவு துருப்பிடித்துள்ளன. வாகனங்கள் மீது செடி கொடிகள் படர்ந்து புதர்களும் உருவாகி வருகிறது. இதேபோல் போலீஸ் நிலைய வளாகத்திலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வீணாகி வருகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடாமல் இதுபோன்று வைத்திருப்பதால் வாகனங்கள் வீணாவதுடன் ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயும் வீணாகிறது. மேலும் தாமதிக்காமல் கிடப்பில் உள்ள வாகனங்களை ஏலம் விட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X