என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
Byமாலை மலர்16 July 2021 10:50 AM GMT (Updated: 16 July 2021 10:50 AM GMT)
விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை ஏலத்துக்கு விவசாயிகள் வைத்திருந்தனர்.
இந்த ஏலத்தில் விழுப்புரம், பண்ருட்டி, செம்பனார்கோவில், தேனி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச் சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர்.
இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், கண்காணிப்பாளர்செந்தில் முருகன், மற்றும் மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.
இதில் அதிகபட்சமாக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 389-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 509-க்கும், சராசரியாக ரூ.6 ஆயிரத்து 646-க்கும் ஏலம் போனது.
இந்த ஏலத்தில் 3 ஆயிரத்து 574 குவிண்டால் பருத்தி ரூ.2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.
திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை ஏலத்துக்கு விவசாயிகள் வைத்திருந்தனர்.
இந்த ஏலத்தில் விழுப்புரம், பண்ருட்டி, செம்பனார்கோவில், தேனி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச் சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர்.
இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், கண்காணிப்பாளர்செந்தில் முருகன், மற்றும் மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.
இதில் அதிகபட்சமாக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 389-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 509-க்கும், சராசரியாக ரூ.6 ஆயிரத்து 646-க்கும் ஏலம் போனது.
இந்த ஏலத்தில் 3 ஆயிரத்து 574 குவிண்டால் பருத்தி ரூ.2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X