search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

    கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் வையாபுரி நகரை சேர்ந்தவர் பிரசாத் (வயது 29). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெயிண்ட் கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பின்னர் வந்து பார்த்துள்ளார். அப்போது அந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிந்து, மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்.
    Next Story
    ×