search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கொரோனா சிகிச்சை முடிந்து திரும்பிய காவலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை

    கோவை வடவள்ளி அருகே கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய காவலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 75). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். ராமநாதனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் கொரோனா குணமடைந்ததும் வீட்டிற்கு திரும்பினார்.

    கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து காணப்பட்டது. இதனால் ராமநாதன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை மதுவுடன் சேர்ந்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் ராமநாதனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராமநாதன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×