என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
Byமாலை மலர்16 July 2021 9:00 AM GMT (Updated: 16 July 2021 9:00 AM GMT)
நெல்லை அருகே வெளியூர் சென்றிருந்த நேரத்தில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள நாஞ்சான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லையா. இவரது மனைவி செல்லத்தாய் (வயது 66).
இவர்கள் சென்னையில் உள்ள மகனை பார்ப்பதற்காக கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர் இவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக செல்லத்தாய், சென்னையிலிருந்து நாஞ்சான் குளத்திற்கு திரும்பி வந்து வீட்டை பார்வையிட்டார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க செயின் மோதிரம் உள்பட 3 பவுன் எடையுள்ள தங்க நகைகளும் ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இது குறித்து செல்லத்தாய் மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
நெல்லை அருகே உள்ள நாஞ்சான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லையா. இவரது மனைவி செல்லத்தாய் (வயது 66).
இவர்கள் சென்னையில் உள்ள மகனை பார்ப்பதற்காக கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர் இவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக செல்லத்தாய், சென்னையிலிருந்து நாஞ்சான் குளத்திற்கு திரும்பி வந்து வீட்டை பார்வையிட்டார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க செயின் மோதிரம் உள்பட 3 பவுன் எடையுள்ள தங்க நகைகளும் ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இது குறித்து செல்லத்தாய் மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X