என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏற்காடு, ஆனைமடுவு பகுதிகளில் மழை
Byமாலை மலர்16 July 2021 8:48 AM GMT (Updated: 16 July 2021 8:48 AM GMT)
ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. பூங்காக்கள் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சேலம், ஏற்காடு, ஆனைமடுவு பகுதிகளில் சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
குறிப்பாக ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. பூங்காக்கள் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதனால் கடைகளில் வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 7 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. ஆனைமடுவு 3, மேட்டூர் 2.2, கரியகோவில், காடையாம்பட்டி, ஓமலூர், சேலத்தில் தலா 2 மி.மீ., எடப்பாடியில் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 21.20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X