என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள் லாரி மோதல் - ஆட்டோ டிரைவர் பலி
Byமாலை மலர்15 July 2021 4:53 PM GMT (Updated: 15 July 2021 4:53 PM GMT)
திருமக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உயரிழந்தார்.
திருமக்கோட்டை:
மன்னார்குடி காத்தாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது35). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும் 4 வயதில் ஆண் குழந்தையும் 6 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர் திருமக்கோட்டையில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் பகலில் ஆட்டோ ஓட்டி விட்டு இரவு நேரத்தில் தினசரி மன்னார்குடியில் உள்ள வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்று இரவு 7.30 மணி அளவில் ரமேஷ் திருமக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு தனது மோட்டர் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
இதில் தலையில் படுகாயமடைந்த ரமேஷ் பரிதாபமாக இறந்தார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்தும் அவர் ஹெல்மெட் தனியாக போய் விழுந்து விட்டது. இது குறித்து தகவலறிந்த திருமக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரமேஷ் உடலை மீட்டு
பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X