search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சுரண்டை அருகே லாட்டரி விற்றவர் கைது

    சுரண்டை அருகே கேரள மாநில லாட்டரிகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.4,320 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை:

    சுரண்டையை அடுத்த சாம்பவர் வடகரை ரெட்டைகுளம் தெருவை சேர்ந்தவர் பீர் முகமது(வயது 74). இவர் சுரண்டை பொட்டல் மாடசாமி கோவில் தெருவில் லாட்டரி விற்றுக்கொண்டிருந்தார்.

    அப்போது ரோந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சந்தேகத்திற்கிடமாக அங்கு நின்று கொண்டிருந்த பீர் முகமதுவை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கேரள மாநில லாட்டரிகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.4,320 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4,250 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×