என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மண் பரிசோதனை-விவசாயிகளுக்கு வேளாண் துறை வேண்டுகோள்
Byமாலை மலர்15 July 2021 9:54 AM GMT (Updated: 15 July 2021 9:54 AM GMT)
ஆடிப்பட்டதுக்கான விதைப்பு, நடவுப்பணிகளை தொடங்க உள்ள நிலையில் மண்ணை பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை வட்டாரத்தில் பி.ஏ.பி., அமராவதி அணை, கிணற்றுப்பாசனம் மற்றும் மானாவாரியாக பல ஆயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ச்சியாக ஒரே வித பயிர் சாகுபடி, தவறான உர மேலாண்மை உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இடுபொருட்கள் செலவும் பல மடங்கு அதிகரிக்கிறது. இதற்கு தீர்வாக சாகுபடிக்கு முன்பாக மண் பரிசோதனை செய்து கொள்ள வேளாண்துறையினர் வலியுறுத்துகின்றனர்.
ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் விவசாயிகள் மண் பரிசோதனை செய்வதில்லை. விரைவில் ஆடிப்பட்டதுக்கான விதைப்பு, நடவுப்பணிகளை தொடங்க உள்ள நிலையில் மண்ணை பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:-
மண் பரிசோதனை வாயிலாக மண்ணில் உள்ள சத்துகளின் விபரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சாகுபடியில் உரமிடலாம். இதனால் இடுபொருட்கள் செலவு பல மடங்கு குறைவதுடன் விளைச்சலும் அதிகரிக்கும். விவசாயிகள் தேவைக்காக நடமாடும் மண் பரிசோதனை நிலையமும் பயன்பாட்டில் உள்ளது.
தற்போது குட்டியகவுண்டனூர் சுற்றுப்பகுதி விவசாயிகளுக்கு நடமாடும் வாகனம் வழியாக மண் பரிசோதனை செய்து தரப்பட்டது. கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகளை சேகரித்து பரிசோதிக்க விரும்பினால் வேளாண்துறை வாயிலாக நடமாடும் மண் பரிசோதனை வாகனம் அப்பகுதிக்கு கொண்டு வரப்படும். பரிசோதனைக்குப்பிறகு உர பரிந்துரைகளும் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகலாம் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X