என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சீரமைக்கப்படுமா?
Byமாலை மலர்15 July 2021 9:37 AM GMT (Updated: 15 July 2021 9:37 AM GMT)
உடுமலை நகரில் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கி சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. இப்பகுதியில் விவசாயத்துக்கு ஆதாரமாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவழை உள்ளது. நடப்பாண்டு தாமதமாக தென்மேற்கு பருவமழை துவங்கி இரு நாட்களாக தீவிரமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் குறித்த நேரத்தில் விதைப்பு செய்ய எதிர்பார்ப்பில் உள்ளனர்.
உடுமலை நகரில் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பஸ் நிலையத்தில் இருந்து நகர எல்லையான ராஜவாய்க்கால் பள்ளம் வரை ஆங்காங்கே தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பாதித்தனர்.
தற்போது அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதியில் துவங்கியுள்ள மழையால் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 775 கன அடியாக உயர்ந்துள்ளது. மழை தீவிரமடைந்து வரும் நிலையில் மழை நீர் ஓடைகளின் நீர்வரத்து மற்றும் நீரோட்ட பாதைகளில் தடுப்புகளை அகற்ற வேண்டும். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X