என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்- இறகுப்பந்து பயிற்சியாளர் போக்சோ சட்டத்தில் கைது
Byமாலை மலர்15 July 2021 8:25 AM GMT (Updated: 15 July 2021 8:25 AM GMT)
பிரசன்ன குமரன் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுபற்றி மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
மதுரை:
மதுரை தெப்பக்குளம் காமராஜர் சாலை நரசிம்மபுரம் தெருவை சேர்ந்தவர் பிரசன்ன குமரன் (வயது 25). இறகு பந்து பயிற்சியாளராக உள்ளார்.
இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
சம்பவத்தன்று பிரசன்ன குமரன் அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பிரசன்னகுமரன் அந்த மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டார். இதற்கு மாணவி மறுத்தார்.
ஆனாலும் அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த மாணவியின் தாய் நேரில் சென்று பிரசன்ன குமரனிடம் நியாயம் கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் பிரசன்ன குமரன் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுபற்றி மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதன்பேரில் மாநகர போலீஸ் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
பின்னர் பிரசன்ன குமரனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இறகுபந்து பயிற்சியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை தெப்பக்குளம் காமராஜர் சாலை நரசிம்மபுரம் தெருவை சேர்ந்தவர் பிரசன்ன குமரன் (வயது 25). இறகு பந்து பயிற்சியாளராக உள்ளார்.
இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
சம்பவத்தன்று பிரசன்ன குமரன் அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பிரசன்னகுமரன் அந்த மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டார். இதற்கு மாணவி மறுத்தார்.
ஆனாலும் அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த மாணவியின் தாய் நேரில் சென்று பிரசன்ன குமரனிடம் நியாயம் கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் பிரசன்ன குமரன் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுபற்றி மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதன்பேரில் மாநகர போலீஸ் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
பின்னர் பிரசன்ன குமரனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இறகுபந்து பயிற்சியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X