என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 ஆண்டுகளாக தலைமறைவு பிரபல குற்றவாளி கைது
Byமாலை மலர்14 July 2021 12:03 PM GMT
சென்னையில் பதுங்கி இருந்த பிரபல குற்றவாளியை உடுமலை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அன்பு குமார் என்பவர் உடுமலை குற்றப்பிரிவு போலீசாரால் சென்னை திருமுல்லை வாயில் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்த அன்பு குமார் மீது மதுரை, காரைக்குடி, கம்பம், தேனி, உடுமலை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது.
அன்பு குமாரை போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவானார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்பு குமார் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிபிரிவு போலீசார் பஞ்சலிங்கம், மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா, முத்துமாணிக்கம், லிங்கேஸ் ஆகியோர் சென்னை அருகே அன்புகுமாரை கைது செய்தனர். பின்னர் உடுமலைக்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அன்புகுமார் நீதிமன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X