என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெற்கு ஆப்பிரிக்காவில் வன்முறை- இந்தியர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு வைகோ வேண்டுகோள்
Byமாலை மலர்14 July 2021 3:08 AM GMT (Updated: 14 July 2021 3:08 AM GMT)
தெற்கு ஆப்பிரிக்காவில் வாழ்கின்ற இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய வணிக நிறுவனங்கள், சொத்துகளை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் ஜேக்கப் ஜூமா 1999-ம் ஆண்டு ஆயுதம் வாங்கியபோது, 2 பில்லியன் டாலர் கையூட்டாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனால், ஜூலை 7-ந் தேதி இரவு கைதானார். ‘அவர் குற்றம் அற்றவர், தற்போதைய ஆட்சியாளர்கள் அவரை பழிவாங்க முயற்சிக்கின்றார்கள், விடுதலை செய்யவேண்டும்’ என கூறி அவரது ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுவரை 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களால் அந்த நாட்டில் வாழ்கின்ற இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய வணிக நிறுவனங்கள், சொத்துகளை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. துணிந்தவர்கள், துப்பாக்கிகளுடன் களம் இறங்கி இருப்பதாக, தமிழ் அமைப்புகளிடம் இருந்து, எனக்கு செய்திகள் வந்தன. எனவே அச்சத்தின் பிடியில் உள்ள தெற்கு ஆப்பிரிக்க இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கும் ஆவன செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கின்றேன்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் ஜேக்கப் ஜூமா 1999-ம் ஆண்டு ஆயுதம் வாங்கியபோது, 2 பில்லியன் டாலர் கையூட்டாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனால், ஜூலை 7-ந் தேதி இரவு கைதானார். ‘அவர் குற்றம் அற்றவர், தற்போதைய ஆட்சியாளர்கள் அவரை பழிவாங்க முயற்சிக்கின்றார்கள், விடுதலை செய்யவேண்டும்’ என கூறி அவரது ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுவரை 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களால் அந்த நாட்டில் வாழ்கின்ற இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய வணிக நிறுவனங்கள், சொத்துகளை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. துணிந்தவர்கள், துப்பாக்கிகளுடன் களம் இறங்கி இருப்பதாக, தமிழ் அமைப்புகளிடம் இருந்து, எனக்கு செய்திகள் வந்தன. எனவே அச்சத்தின் பிடியில் உள்ள தெற்கு ஆப்பிரிக்க இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கும் ஆவன செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கின்றேன்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X