search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கரூர் அருகே வேன் டிரைவர் தற்கொலை

    கரூர் அருகே வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் பசுபதிபாளையம் அருகே உள்ள குழந்தாகவுண்டனூரை சேர்ந்தவர் முருகன் (வயது 30). வேன் டிரைவரான, இவருக்கு திருமணமாகி பாரதி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முருகன் கடந்த 6 மாதமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட முருகன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×