search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க.பேனர் கிழிக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
    X
    பா.ஜ.க.பேனர் கிழிக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    உடுமலையில் பா.ஜ.க. பேனர் கிழிப்பு-பரபரப்பு

    திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க., சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எல்.முருகன் மற்றும் அண்ணாமலையை வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
    உடுமலை:

    தமிழக பா.ஜ.க.தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவி யேற்றுள்ளார். இதையடுத்து தமிழக பா.ஜ.க. புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற 16-ந்தேதி பொறுப்பேற்க உள்ளார்.  

    இருவருக்கும் பதவி வழங்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க. வினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

    திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க., சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எல்.முருகன் மற்றும் அண்ணாமலையை வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் உடுமலை நகர பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரை மர்மநபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இதையறிந்த பா.ஜ.க.வினர் அங்கு திரண்டனர். மேலும் பேனரை கிழித்த நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வலியுறுத்தி மாவட்ட துணைத்தலைவர் வடுகநாதன் தலைமையில், மாவட்டசெயலாளர் ஜல்லிப்பட்டி முருகன் மற்றும் நிர்வாகிகள் உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தனர். இந்த சம்பவத்தால் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×