search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜவாய்க்காலை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஆகாயத்தாமரைகளால் மூடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
    X
    ராஜவாய்க்காலை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஆகாயத்தாமரைகளால் மூடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    மடத்துக்குளம் ராஜவாய்க்காலில் ஆகாயதாமரைகள் அகற்றப்படுமா?

    மடத்துக்குளம் ரெயில் நிலையத்துக்கு அருகிலுள்ள பகுதியில் வாய்க்காலையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஆகாயத்தாமரைகளால் மூடப்பட்டுள்ளது.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம், சோழமாதேவி உள்ளிட்ட பல கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து பாசன நீரைக்கொண்டு வரும் பாசன வாய்க்காலான ராஜவாய்க்கால் முறையாக பராமரிக்கப்படாததால் பல இடங்களில் ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக மடத்துக்குளம் ரெயில் நிலையத்துக்கு அருகிலுள்ள பகுதியில் வாய்க்காலையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஆகாயத்தாமரைகளால் மூடப்பட்டுள்ளது. அத்துடன் பல இடங்களில் இந்த வாய்க்காலில் குப்பைகள் வீசியெறியப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் காகிதங்கள், பாட்டில்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தேங்கிக் கிடக்கிறது. அந்த பகுதிகளில் தண்ணீர் மாசுபடுவதுடன் கொசு உற்பத்தியும் அதிகரிக்கிறது.

    ஆகாயத்தாமரைகளின் ஆக்கிரமிப்பால் நீரோட்டத்தில் தடை ஏற்படுவதுடன் பெருமளவு தண்ணீர் வீணாகிறது. மேலும் சில பகுதிகளில் இந்த வாய்க்காலில் சாக்கடைக்கழிவு நீரைக் கலந்து விடுகின்றனர். இதனால் நீர் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு நோய்த் தொற்றுகள் பரவவும் காரணமாகிறது. மேலும் இந்த கழிவுகள் அனைத்தும் கடைசியாக சென்று சேருமிடம் விளைநிலங்களாகும். இதனால் விளைநிலங்கள் பாழாவதுடன் விவசாயிகளுக்கு பல இடையூறுகளையும் ஏற்படுத்துகின்றன.

    எனவே ராஜவாய்க்காலிலுள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் கழிவுகளை முறையாகத் தூர்வாரி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவுகள் மற்றும் குப்பைகளை ராஜவாய்க்காலில் கலப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×