search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் பொன்முடி
    X
    அமைச்சர் பொன்முடி

    கல்லூரிகள் திறப்பது பற்றி சுகாதாரத்துறையுடன் ஆலோசித்து முடிவு- அமைச்சர் பொன்முடி

    கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் ஆகஸ்டு 1-ந்தேதி திட்டமிட்டபடி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  ஆஸ்திரேலிய நாட்டு தூதரக அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

    பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    முதல்-அமைச்சரின் ஆணைப்படி உயர்கல்வித்துறை வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளுடன் கல்வி தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களுடன் 83  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

    மேலும் பல பல்கலைக்கழகங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளது. உயர்கல்வித்துறை வளர்ச்சிக்காக அனைத்தையும் செய்வோம். இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்தது.

    கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் ஆகஸ்டு 1-ந்தேதி திட்டமிட்டபடி தொடங்கும். தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதல்-அமைச்சர் முடிவு செய்வார்.

    Next Story
    ×