என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமராவதி சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 2 மாதம் சம்பளம்
Byமாலை மலர்13 July 2021 8:40 AM GMT (Updated: 13 July 2021 8:40 AM GMT)
ஆலையின் நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சீராக சம்பளம் வழங்கப்படுவது இல்லை.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். நடப்பாண்டு கடந்த ஏப்ரல் 16-ந்தேதி அரவை தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பல மாதம் சம்பளம் நிலுவையாக இருந்தது. ஆலையின் நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சீராக சம்பளம் வழங்கப்படுவது இல்லை. தற்போது பிப்ரவரி தொடங்கி ஜூன் மாதம் வரை ஐந்து மாத சம்பளம் நிலுவை ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து அரசு கவனம் செலுத்தி சம்பளம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆலைத்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற அரசு பிப்ரவரி, மார்ச் ஆகிய இரண்டு மாதங்களுக்கான சம்பளம் வழங்க உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் வங்கிக்கணக்கில் சம்பளத்தொகை செலுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X